Tuesday, September 23, 2008

நோய்

தலை தொட்டு,
 கழுத்து தடவி, 
முகம் பதறி நீ தவிக்கையில் 
தோன்றுகிறது, 
காய்ச்சலும் அழகாகத் தானிருக்கிறது.

Wednesday, September 3, 2008

ஈரமான ரோஜா

ஈரமான ரோஜாவைப் பறிக்கும்போது யாருக்கும் தெரியவில்லை செடியின் அழுகை என்று.

அன்பே சிவம்

அன்பே சிவம்.
அவன் கையிலும் ஆயுதம்.

Tuesday, September 2, 2008

கண்ணீர்

மழை பெய்கிறது என குடை எடுத்து வருகிறாய்....உனை தொட முடியாத சோகத்தில் அதிகமாய் அழுகிறது வானம்...

மழை

எதைப் பற்றியோ எழுதுகிறாயே! என்னைப் பற்றியும் கொஞ்சம் எழுதேன் என்கிறாய். மழையைப் பற்றி எழுதுவது சுகமா? மழையில் நனைவது சுகமா??