Wednesday, October 8, 2008

உணர்வுகள்

அரையிருளில் காதலின் வெளிச்சத்தில் தொடங்குகிறது நம் மூர்க்க யுத்தம்.
இலக்கணங்கள் ஏதுமில்லை.
வலமிடம் தெரியவில்லை.
உச்சி முகர்ந்து,உள் நரம்பு துடிக்க,
திடீரென அறிவிக்கிறாய்.
யுத்தம் முடிந்து விட்டதென்று.
முதுகு காட்டி துயிலும் எண் கணவா,
என்றெனும் உண்ர்ந்திருக்கிறாயா எனக்கும் உணர்வுகள்
 உண்டென்று?

காதல்?

தினமிரவு நீ நடத்தும் மூர்க்க யுத்தத்தில் முடிந்து போவதில்லை தாம்பத்யம்.
அரையிருட்டு வெளிச்சத்தில் நீ வெறியுடன் தரும் இதழ் முத்தம் மட்டுல்ல,
பகலினில் அன்புடன் தரும் ஒற்றை நெற்றி முத்தமும் காதல் தான். புரிந்து கொள் என்  கணவா........

இலங்கை

அடக்க வேண்டுமென்று சிங்கங்கள்.
பொங்கி போராடும் புலிகள்.
இதழ்களில் புன்னகையோடு அமைதியாய் காத்திருக்கிறார் புத்தர்.
அவைகள் மனிதர்களாக மாற.

மெரீனா

அண்ணாவின் சமாதி மட்டுமல்ல, 
எத்தனையோ காதல்களின் சமாதியும் 
கடற்கரை மணலினில்.
முடிவினில் அண்ணா என்று அழைத்ததால்.