Monday, April 14, 2008

பொன் மாலைப்பொழுதுகள்


ஏதோதோ பேச வேண்டும் என்று பூங்காவிற்கு அழைக்கிறாய். உன் முகம் சில நேரம் , பாதம் சில நேரம் என்று மணிகள் கடக்க, நம்மிடையே தூது சென்றே கால் வலிக்கிறது காற்றுக்கு. கடைசியாய் பேசி விட்டாய் "நேரமாகி விட்டது கிளம்புகிறேன் " என்று.இப்படியே கழிகிறது நம் பொன் மாலைப் பொழுதுகள்.